திருக்கழுக்குன்றம்:-#முத்திகைநல்லான் குப்பம் முருகன் கோயில்.

 #திருக்கழுக்குன்றம்:-#முத்திகைநல்லான் குப்பம் முருகன் கோயில்.


#திருக்கழுக்குன்றத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது #அருள்மிகு முத்துக்குமாரசாமி மலைக்கோயில்.



#திருக்கழுக்குன்றத்திலிருந்து முத்திகைநல்லான் குப்பம் வழியாகவும்,அம்மணம்பாக்கம் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் இது. கோயிலின் அடிவாரத்தில் ஶ்ரீதேவிகருமாரியம்மன் கோயில் உள்ளது.

அங்கிருந்து படி ஏறுகையில் மயில் சிற்பம் உள்ளது
: அடிவாரத்திலிருந்து சுமார் 200 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளது.



மலைக்கு 50 அடி தூரத்தில் தியான மண்டபம் -திருமண மண்டபம் அமைந்துள்ளது.





திருமணம் -காதுகுத்தல் பிற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் சினிமா படபிடிப்பும் அங்கு அடிக்கடி நடைபெறுவதாக சொன்னார்கள்.மலைமீது சென்றதும் வள்ளி தெய்வானையுடன் முருகன் நமக்கு அருள்பாலிக்கின்றார்.




கோயிலினை சுற்றி இயற்கை காட்சி அருமையாக உள்ளது.


தூரத்தில் #வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தெரிகின்றது.


மலைமீது வாகனத்தில் செல்ல பாதை அமைத்து வருகின்றார்கள்.முருகர் கோயிலுக்கு பின்னால் பெருமாள் கோயிலும் அடிவாரத்திலும் பெரிய குளமும் அமைக்க உள்ளார்களாம்.



வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனை வேண்டினால் திருமணம் விரைவில் கைகூடுவதாக சொன்னார்கள்.திருத்தணிக்கோ -திருப்பேரூருக்கோ செல்ல முடியாதவர்கள் இங்குள்ள முருகனை சென்று வழிபடலாம். கிருத்திகை -சஷ்டி இங்கு விஷேஷம். நேரம் கிடைக்கும் சமயம் சென்று வாருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம்.

 #திருக்கழுக்குன்றம்:-#வீராபுரம் #கூச்சீஸ்வரர் மற்றும் #ஜேஷ்டாதேவி ஆலயம்.

செங்கல்பட்டு மாவட்டம் #திருக்கழுக்குன்றம் வட்டம் வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது #கூச்சீஸ்வரர் ஆலயம்.



#கல்வெட்டு தகவல்:-
#திருக்கழுக்குன்றம் வட்டம் நெரும்பூர் உள்வட்டத்தில் வீராபுரம் என்கின்ற ஊர் உள்ளது.இந்த ஊரில் #கூச்சீஸ்வரர் என்கின்ற சிவன் கோயில் உள்ளது.கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர் காலத்தில் உஞ்சீஸ்வரர் தாழ்வார் கோயில் என இந்த கோயில் அழைக்கப்பட்டுள்ளது.இளங்கண்ணல் ஏரன்,அருள்நிலை நம்பி திருநீலகண்டன் இருவரும் மண்டபம் எடுத்துள்ளனர்.கி.பி.988 ல் அநுக்கப்பீமன் படைபிரிவில் இருந்த விடங்கன் என்பவனால் கோயில் கட்டப்பட்டு வழிபாட்டு தொடரவும் திருவமுது நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அருநிலை நம்பிபோல் புலியூரைச் சேர்ந்த தேவன் வயிரமேகன் என்பவன் கோயிலில் விளக்கு எரிக்க நன்கொடை அளித்துள்ளான். செம்பூர் கோட்டத்து நெடுங்குன்ற நாட்டு நெடுங்குன்றமாக வீராபுரம் சோழர் காலத்தில் இருந்துள்ளது.பல்லவர் கால சோமஸ்கந்தர் சிலையும் சிவலிங்கமும் பூமியில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. ஜேஷ்டாதேவி சிலை அருகில் உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.15.09.1935 கோயிலில் திருப்பணி புரிந்து கல்வெட்டு வைத்துள்ளனர்.சமீபத்தில் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் #கூச்சீஸ்வரர்#ஜேஷ்டாதேவி ஆலய தகவல்:-
தவ்வை என்பவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.






இவர் பெண் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை ஜேஷ்டா தேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு.
தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.
இந்துத் தொன்மவியல்படி பாற்கடலைக் கடைந்த போதுஜேஷ்டா தேவி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தங்கை லட்சுமி அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.
#தவ்வை வழிபாடு
தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும் பிறகு சாக்ததிலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.
தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர். இவ்வண்ணார்களை ஏகாலி என்றும் அழைக்கின்றனர்.
தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் #திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வீராபுரம் கிராமத்திலும் கோயில் அமைந்துள்ளது.
#கோயில் அமைப்பு:-
இறைவன் கிழக்கு பக்கம் பார்த்து நமக்கு அருள்பாலிக்கின்றார். அம்மன் மங்கலாம்பிகை.கருவரையை சுற்றி வருகையில் வினாயகர்.தட்சணாமூர்த்தி.விஷ்ணு.பிரம்மா,தூர்காதேவி சிலைகள் உள்ளன.





பைரவர் சிலை தனியாக உள்ளது. கோயிலுக்கு பக்கத்தில் ஜேஷ்டாதேவிக்கு ஆலயம் உள்ளது. ஆலயத்தின் உள்ள வேலைப்பாடுகள்
அருமையாக
அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரில சிறிய தொட்டியில் நீர் நிரம்பி அதில் ஆமை சிற்பம் உள்ளது.


சட்டென பார்க்கையில் தண்ணீரில் ஆமை உள்ளதுபோல் உள்ளது. நவகிரக சன்னதி எதிரில் அமைந்துள்ளது.கோயிலுக்கு அருகில் பெரிய குளம் உள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.








அந்த ஆலயத்தில் இருந்து பார்க்க #திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை தெரிகின்றது.(திருக்கழுக்குன்றம் -வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி உள்ள எட்டு ஆலயங்களில் இது இரண்டாவது என நினைக்கின்றேன்)
திருமணத்தடை,தொழில்வேலை வாய்ப்பு,வியாபாரத்தடை,புத்திரபேறு தடை,ஏவல் பில்லி சூன்யத்தால் ஏற்படும் தடைகள் விலகும்.
ஆலய பூஜாரி தொடர்புக்கு:-திரு.மோகன் அவர்கள் போன்:-9600918511
கிராமத்து சூழலில் கோயில்
அருமையாக
உள்ளது. நேரம் கிடைக்கும் சமயம் சென்று இறைவனை வணங்கி வாருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்