இடி அபிஷேகம்.
பால் அபிஷேகம்.பஞ்சாமிர்த அபிஷேகம். பன்னீர் அபிஷேகம்.தேன் அபிஷேகம் என பலவித அபிஷேகங்களை இறைவனுக்கு செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இடி அபிஷேகம் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? ஒவ்வொரு வருடமும் இறைவனுக்கு இடி அபிஷேகம் இங்குள்ள வேதகிரீஸ்வரருக்கு நடைபெறுகின்றது. .
திருக்கழுக்குன்றத்தில் தேவலோக இந்திரன் பூஜை செய்தான். தொடரந்து பூஜித்தும் வருகின்றான். அதற்கு ஆதாரமாக இங்கு
மலைமீது அமைந்துள்ள கருவறை கோபுரத்தின் கலசத்தின்
அருகில் சிறிய துவாரம் இருப்பதை இன்றும் காணலாம்.
அந்த துவாரத்தின வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தை
சுற்றி பரவி பாய்ந்து விடுகின்றது. கடும் மழையுடன் இடி
விழுந்தாலும் ஊருக்கு பாதிப்பு ஏதும் இல்லை.தொடர்ந்து
இந்த மலையில் அமைந்துள்ள ஆலயத்தில் இடி விழுந்து
வருகின்றது என்பதை
”அடிபட்டீர் கலலாலும் எறிப்பட்டீர்,
அத்தனைக்கும் ஆனாயந்தப்
படிபபட்டும் போதாமல் உதைப்பட்டீர்
இப்படியும் படுவாருண்டோ?
முடிபட்ட சடையுடையீர் கழுக்குன்றீர்
முதற்கோணல் முட்டக்கோணல்
இடிபட்டும் பொறுத்திருந்தீர் சிவ
சிவா உமைத் தெய்வமென்னலாமே”
என்று வரும் சொக்கநாதர் பாடலாலும்,
உதைவயன்ன கல்லெறி யென்னவில்
உடனே பிரம்படி யென்ன மற்(று)
இது வன்றியும் சிவனே யுனக்(கு)
இடியும் தலைப்பொறியோ வையா”
என வரும் கழுகாச சதகச் செய்யுளும் வலியுருத்துகின்றது.
நேற்று இரவு (25-10-2010 )கடும் மழை - பயங்கர மின்னல் -
அதிரவைக்கும் இடி சத்தம். இந்திரனின் இடி பூஜை
இனிதே முடிந்தது.
அனைவரும் இறைவனை வணங்கினோம்.
ஓம் நமச்சிவாய....
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
9 கருத்துகள்:
சில, இல்லை நிறைய விஷயங்கள் நம் சிற்றறிவுக்கு விளங்குவதே இல்லை மாப்ள.
பதிவிற்கு நன்றிகள்
patam aruputham. seithikal puthumai. vaalththukkal.
அருமை வேலன் சார்,
ஒவ்வொரு வருடமும் இறைவனுக்கு இடி அபிஷேகம் இங்குள்ள வேதகிரீஸ்வரருக்கு நடைபெறுகின்றது. .
ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் இறைவனின் தெய்வீகத்தையும் நமக்கு உணர்த்துகிறது
படங்கள் அழகு
படங்களைப்பார்த்து நாங்களும் வணங்கினோம் சார்
அனைவரும் இறைவனை வணங்கினோம்.
ஓம் நமச்சிவாய....
அருமையாக உள்ளது வேலன் சார்.
வாழ்த்துக்கள்...
அரியாத தகவல் நன்றி
படம் அருமை
வேலன் சார் உங்கள் தள முகப்பில் எப்படி அந்த கழுகு படத்தை வர வைத்தீர்கள் என கூறவும்
ஆஹா!
எங்களைப் போல வெளிநாட்டிலிருப்பவர்களுக்கு இந்த படங்கள் உண்மையிலேயே தேவை.
மிகவும் நன்றி. நாங்கள் தரிசனம் செய்துட்டோம் உங்க புண்ணியத்துல....!
மிக்க நன்றி வேலரே!
itha neenga capture paningala... Nice capture...:)
கருத்துரையிடுக