#திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.

#திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.






#திருககழுக்குன்றம் #பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ளே உள்ள சுரங்கத்தினை இளையவயதினர் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.கடந்த 09.06.1967 வெள்ளிக்கிழமை அன்று தாழக்கோயிலின் உட்பிரகாரத்தின் வடக்குபக்கம் #முருகன் சன்னதிக்கும் 63 நாயன்மார் சிலைகளுக்கும் நடுவில் திருப்பணிக்காக தோண்டும்போது சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.சுரங்கத்தின் உள்ளே சென்று பார்க்கையில் பல செப்புச்சிலைகள் கண்டறியப்பட்டன.#சிவகாமியுடன்#ஆடல்வல்லான்,#ிரதோஷநாயகர்.#பள்ளியறைசாச்சியார்.#பள்ளியறைச்சொக்கன்.#விநாயகர்.#கரைக்கால்அம்மையார் போன்ற சிலைகள் கிடைத்தது.கோயிலின் உள்ளே சுரங்கம் உள்ள பகுதியில் உள்ள ஜன்னலுக்கும் சுவற்றுக்கும் இடையே உள்ள இடைவெளியை பார்த்துக்கொள்ளுங்கள். கோயிலுக்கு வெளியே சென்று (அருணாசலஈஸ்வரர் கோயிலுக்கு எதிரே} சுரங்கம் உள்ள ஜன்னலிலிருந்து சுவற்றுக்கு இடையே உள்ள தூரத்தினை பாருங்கள். உள்ளே உள்ளதைவிட வெளியில் தூரம் அதிகமாக இருக்கும்..சுரங்கத்திலிருந்து மலைக்கு சுரங்கப்பாதை உள்ளது என செவிவழி செய்தியும் உண்டு...அடுத்தமுறை கோயிலுக்கு செல்லும் சமயம் சுரங்கம் இருப்பதை பார்த்துவாருங்கள்.
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக