திருக்கழுக்குன்றம்:-உ.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம்.

திருக்கழுக்குன்றம்:-.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம்.


திருக்கழுக்குன்றத்தில் உ.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம் அமைத்திட அரசுக்கு கோரிக்கை..தமிழுக்காக நிறைய தொண்டாற்றியவர் உ.வே.ஐய்யா அவர்கள். பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களை தொகுத்தவர்.நிறைய நூல்களையும் எழுதிஉள்ளார்.
திருக்கழுக்குன்றம் பற்றியும் நூல்கள் எழுதி உள்ளார். தனது வாழ்நாளில் கடைசி இரண்டுவருடங்கள்திருக்கழுக்குன்றம் சன்னதி தெருவில்உள்ள திருவாவடுதுறை ஆதின மண்டபத்தில் தங்கி நூல்கள் எழுதிவந்தார். கடந்த 28.04.1942 என்று திருக்கழுக்குன்றத்திலேயே இயற்கைஎய்தினார். அவருடைய இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு நினைவுமண்படம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (நன்றி தினமணி28.03.2019)கன்னியாகுமரி அல்லது சென்னையில்நினைவுமண்டபம் கட்ட ஆலோசித்து வருகின்றார்கள். அவர் உயிர்நீத்த நமது திருக்கழுக்குன்றத்தில் நினைவு மண்டபம் கட்டினால் நன்றாக இருக்கும். மேலும் திருக்கழுக்குன்றத்தில் நினைவுமண்டபம் கட்டுவதே சாலசிறந்ததாகும். இதன் மூலம் நமது ஊர் பெருமையடையும். சுற்றுலாதலமாகவளர்ச்சியடையும்.சம்பந்தப்பட்டவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல திருக்கழுக்குன்றம் மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்.நமது ஊர்..நமதுபெருமையை உலகறிய செய்திட பதிவினை (ஷேர்) பகிர்ந்திட வேண்டுகின்றேன்.
வாழ்கவளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக