#திருக்கழுக்குன்றம்:-#தெப்பல்உற்சவம்.

வருகின்ற 08.02.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் #சங்குதீர்த்த குளத்திலும் 09.02.2020 ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி அளவில் #ரிஷபதீர்த்த குளத்திலும் #தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. 


அனைவரும் வருக..இறைவன்அருள்பெருக..
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு #கம்பாநதி ஆலயம்.

அருள்மிகு #வேதகிரீஸ்வரர் மலை ஏறும் சமயம் நெட்டுபடி நடுவில் அருள்மிகு #கம்பாநதி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் பற்றிய ஆன்மீக தகவல்:-


இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.அந்த நிகழ்வினை விளக்கும் ஆலயம் (சிலை) தான் படத்தில் உள்ளது....




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்