திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.

திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.

பழங்கால பெரிய சிவன்கோயில் (திருக்கழுக்குன்றம்)சுற்றி எட்டு சிறிய சிவன்கோயில்கள் அமைந்திருக்கும். அவற்றைகண்டுபிடித்து பதிவிடுங்கள் என சென்னை நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி கண்டுபிடித்து பதிவிட்ட முதல் சிவன்கோயில் இது...பதிவுகள் தொடரும்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து  திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் சாலையில் மானாம்பதி என்கின்ற ஊர் அமைந்துள்ளது. 

சிவபெருமான் அம்பாளுடன் வந்து வேடனாக மான்மீது அம்பு எய்திய காரணத்தினால் மான்அம்பு எய்திய பதி என்கின்ற பெயர் மருவி மானாம்பதி என அழைக்கலாயிற்று என்று செவிவழி செய்தி உள்ளது.

கல்வெட்டில் உள்ள தகவல்கள்:-

முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த 

கோயிலுக்கு இராட்டிடக்கூடன் மூன்றாம் கிருஷ்ணன் கி.பி.967 –ல் 

விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான். முதலாம் இராஜராஜன் 

இக்கோயில் திருப்பணி செய்து பராமரித்துள்ளான்.கி.பி. 990 ல் 

கனகாட்டூர் திருக்காபுர தேவர்க்கு வழிபாடு.விளக்கெரிக்க 

நிலமளிக்கப்பட்ட செய்தியும்கி.பி.993ல்  கனகாட்டூர் ஊரார் நிலம் 

விற்பனை செய்த விவரமும் குறிப்பிடபட்டுள்ளன. அத்துடன் 

திருவகத்தீஸ்வரர் சாத்தன் கோயில் குறிப்பும் திருக்காபுர தேவன் 

என்ற வரி கல்வெட்டும் இத்துடன் உள்ளது.திருக்கழுக்குன்றம் 

பேரூராகவும் இந்த ஊர் சிற்றுராகவும் இருந்திருக்கலாம். கி.பி.993 ஆம் 

ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் பிடாரி மற்றும் சாஸ்தா கோயில்கள் 

குறிப்பிடபட்டுள்ளன கி.பி.999 ல் அகத்தீஸ்வரர் கோயில் குறிப்பும் 

உள்ளது.கி.பி.1125 ல் விக்கிரமன் இக்கோயிலுக்கு நிலம் விற்பனை 

செய்துள்ளதை தெரிவித்துள்ளான்.கோப்பிருஞ்சிங்கன்ஆட்சியில் 

திருக்கரபுர கணக்கன் நந்தா விளக்கெரிக்க கி.பி.1257 ல் ஏற்பாடு 

செய்துள்ளான்.கி.பி.1345 ஆம்ஆண்டில் இராஜநாராயண சம்புராயன் 

இக்கோயிலை பழுதுபார்த்து வழிபாடுகள் தொடர வானமாதேவி 

கிராமத்தையும் திருக்கழுக்குன்றத்து ¼  பகுதி நிலங்களையும் 

இறைநீக்கி தேவதானமாக்கியுள்ளான்.வழிபாடு தொடர்பாக 

கைக்கோளர்களுக்கும் வணிகர்களுக்கும் தகராறு செய்து 

கொண்டதால் முதலாம் வேங்கடனின் முகவர் செஞ்சமநாயக்கன் 

நேரில் விசாரித்து உடையவர்.பெருமாள். பிள்ளையார் கோயில் 

நிர்வாகத்தில் வணிகர்கள் தலையிலாமல்  இருக்க ஆணை 

பிறப்பித்துள்ளான்.கி.பி 1610 ஆம் ஆண்டு இந்த ஊரில் நடைபெறும் 

புதன்கிழமை வார சந்தையில் வசூலிக்கப்படும்  அல்லாயம் வரியை  

செல்வவினாயகர் கோயில் வழிபாட்டுக்காக வையப்ப நாயக்கருக்கு 

வழங்கப்பட்டுள்ளது கல்வெட்டுமூலம் தெரியவருகின்றது,.பசவதேவ 

மகாராஜவும் திம்மு நாயக்கனும் வீட்டு மனைகளை வழிபாட்டுக்கு 

வழங்கியுள்ளனர். வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16 

கல்வெட்டுக்கள்  இக்கோயிலில் அடையாளமிடப்பட்டுள்ளன.

பல்லவர் காலத்தை சேர்த்த சூரியன் சிற்பமும் சூலதாரி என்கின்ற 

சூலத்தேவர் சிற்பமும்.துர்கை சிற்பமும் உள்ளது.

கோயிலில் உள்ள  சம்புவராயர் கல்வெட்டு திருக்கழுக்குன்றப்பற்று 

வானவன்மாதேவி  என இந்த ஊரினை குறிப்பிடுவதால் .முதலாம் 

இராஜேந்திரன் ஆட்சியில் இவ்வூரின்அடுத்துள்ள அகரம் என்கின்ற 

கிராமத்தில் 4000 பிராமணர்களை குடியமர்த்தி வானவன்மாதேவி 

சதுர் மங்கலம் என பெயரிடப்பட்டுள்ளது.அகரத்தின் ஒருபகுதியாக 

களக்காட்டூர் இருந்துள்ளது. பிராமணர்கள் வசித்த பகுதி அகரம் 

எனவும்பிறபகுதிகள்சதுர்வேதமங்கலம்என்றும் அழைக்கப்

பட்டுள்ளது.

 தகவல்:-காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு என்கின்ற நூலிலிருந்து...

ஆலயம் பற்றிய தகவல்கள்:-

செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்கன்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.கோயிலில் நுழையும் முன்னனே தற்போதைய தற்கொலைப்படை போலவே அந்த காலத்தில் இருந்துள்ளது. கோயிலுக்கோ நாட்டுக்கோ சேதம் வரும் சமயம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலை படை வீரர்கள் சிலைகள் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இதனை வழிபட்டுவருகின்றனர். 

கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் நம்மளை வரவேற்கின்றது. கோயிலின் இடதுபுறம் வினாயகர் சன்னதி உள்ளது. வினாகயர் அம்மாளுடன் ஞானசக்தி வினாயகராக  காட்சியளிக்கின்றார். 

கோயிலின் கருவரையில் சிவபெருமான் திருக்கரைஈஸ்வரராக நமக்கு காட்சியளிக்கின்றார்.

கருவரையை சுற்றி வருகையில் முதலில் சூரியன் சிலை உள்ளது. இது பல்லவர்காலத்தை சேர்ந்தது. இதுபோல சூலதாரி என்கின்ற சூலத்தேவர் சிற்பமும் தூர்கைஅம்மன் சிற்பமும் பல்லவர்காலத்தினை சார்ந்தது.

சூரியன் சிற்பம்:-

சூலத்தாரி என்கின்ற சூலத்தேவர் சிலை:-

தூர்கையம்மன் சிலை:-

நால்வர் சிலை:-

இங்கு யோகபைரவர் மற்றும் கால பைரவர் என அருகருகே இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாக உள்ளது.
இந்த கோயிலின் கருவரை கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை தக்க வைக்க முடியும் என முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சோழர்கால கோயில்களில் இந்த கஜபிருஷ்ட அமைப்பினை காணலாம்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் இவ்வாறான  அமைப்பினை கொண்டது.

கோயிலின் பின்புறம் குளம் ஒன்று அமைந்துள்ளது. கருவரையின் நிழல் இந்த குளத்தில் தெரிவது தளத்தின் மற்றுமொரு விஷேஷமாக கருதப்படுகின்றது.இந்த குளத்தில் 48 நாட்கள் குளித்து வந்தால் நாள்பட்ட சரும நோய்கள் குணமாவதாக குறிப்பிடுகின்றார்கள்.

கோயிலின் பின்புறம் கன்னிமார்கள் சிலை அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் சன்னதியும் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சன்னதி தனியாக உள்ளது. பாடலாம்பிகை என்கின்ற பெயருடன் அம்மன்அருள்பாளிக்கின்றார்.



கோயிலின் சிறப்புகள்:-
குரல்வளம் சம்பந்தபட்ட திக்குவாய் உள்ளவர்கள்.தைராய்டால்  பாதிக்கப்பட்டவர்கள்.இக்கோயிலில் அபிஷேகம் செய்து தரப்படுகின்ற தேன் உள்ளுக்கு அருந்தியும் விபூதியை பூசி வந்தால் நாளடைவில் சரியாகின்றது.அதுபோல ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இங்கு தரப்படும் திருநீறை பூசிகொண்டு சிறிது அளவு எடுத்து நீரில் கரைத்து அருந்திவந்தால் ஆஸ்துமா நோய் குணமாகின்றது.
ஐப்பசி மாதம் நடைபெறுகின்ற சூரசம்ஹாரம் முடிந்து முருகனுக்கு அணிவிக்கப்படும் திருக்கல்யாண மாலையை கல்யாணமாகமல் இருப்பவர்களுக்கு அணிவித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமணமாகிவிடுகின்றது.
இரண்டு பைரவர்கள் அருகருகே அமைந்துள்ளது.
பல்வவர் கால சூரியன்.சூலத்தேவர் சிலை  மற்றும் துர்கை அம்மன் சிலைகள் அமைந்துள்ளது.
கருவரை கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது.
கிரகணத்தின்போது ஏற்படும் தோஷம் இந்த ஆலயத்திற்கு வந்தால் நிவர்த்தியாகும்.
கருவரையின் நிழல் குளத்தில் விழுவது ஆலயத்தின் சிறப்பாகும்.


திரு.எம்.எம்.குமாரசாமி முதலியார்

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் -இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்கின்ற பாடலுக்கு ஏற்ப அறங்காவலாராக சிறப்பாக பணியாற்றியவர் திரு.குமாரசாமி முதலியார். திருக்கழுக்குன்றத்தில் அவர் அறங்காவலாக இருந்தசமயத்தில் செய்த பணிகள் ஏராளம். திருக்கழுக்குன்றம் பற்றிய  நூல்களை எழுதியுள்ளார். அவர்கள் வம்ச வழிவந்தவர்கள் புகைப்படங்கள் கோயிலில் வைத்துள்ளார்கள்அவர்வழி வந்த வாரிசுகள் தற்போது இந்த மானாம்பதி தீர்த்தகரைஈஸ்வரர் கோயிலினை சிறப்பாக பராமரித்து வருகின்றார்கள்.
.கோயில் பூஜை சம்பந்தமாக தொடர்புகொள்ள
 திரு.திருமணி அவர்கள்..போன்:-9791017692.
நேரம் கிடைக்கும் சமயம் இறைவனை சென்று தரிசித்து வாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-1959 ல் வெளிவந்த திருக்கோயில் இதழில் திருக்கழுக்குன்றம்.

#திருக்கழுக்குன்றம்:-1959 ல் வெளிவந்த திருக்கோயில் இதழில் #திருக்கழுக்குன்றம்.
தமிழகஅரசு திருக்கோயில்கள் பற்றி புத்தகம் வெளியிட்டு வருகின்றது. அதில் 1959 ல் வெளிவந்த இதழில் #திருக்கழுக்குன்றம் பற்றி செய்தி வந்துள்ளது....செய்திஉங்கள்பார்வைக்கு..







 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.

 #திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ #அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ #ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.





















கோடி பாவங்ளை போக்கும் அருள்மிகு ஸ்ரீ #ருத்திரகோடீஸ்வரர்தொண்டை வளநாட்டில் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கில் #திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ.தூரத்திலும் இச்சிவாலயம் அமைந்துள்ளது. #திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ருத்திகோட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. '

ஆலயம் அனைத்தும் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். மன்னர்களால் கட்டப்பட்டு போற்றி பாதுகாக்கப்பட்ட கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது. #திருக்கழுக்குன்றம் அருள்மிகு ஸ்ரீ அபிராமநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ #ருத்திரகோடீஸ்வரர் ஆலயம் வடிவமைப்பில் காளிங்க நர்த்தனர். கோயிலைக் கட்டிய மன்னர் மற்றும் மன்னர்கள் சிலர் உருவங்கள் மஹரிஷிகளின் உருவங்கள் தலையில் பலாப்பழம் சுமந்து நிற்கும் மனிதர். பல தூண்களில் பலவித வடிவங்களில் சிவலிங்கங்கள் விநாயகர், முருகர் தனது இருகைகளையும் தலைக்குமேல் கூம்பிட்டு வணங்கும் பானா, ருத்ரன் போன்ற சிறப்பம்சங்கள் பொருந்திய சியா ரூபங்கள் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.

தேவ கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ மஹாவில் பிரம்மதேவர் ஸ்ரீ தூர்க்கை போன்ற கோஷ்ட மூர்த்திகள் அமைந்து அருள்பாலிக்கின்றனர், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கம்பீரமான தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். பைரவர் பெருமான் நாய் வாகனத்துடன் அற்புதக் கோலத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சுவாமியின் மூலஸ்தானத்தின் பின்புறம் கன்னிமூல கணபதியும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ ஷண்முகப்பெருமாளும் அருள் கூட்டுகின்றனர்.
மஹா மண்டபம் மிகவும் பெரிய மண்டபமாக விளங்குகிறது. சூரியன், சந்திரன் இருவரும் அருள்பாலிக்கின்றனர். அர்த்தமண்டபம் அந்தரானம் கருவறை அமைப்புடன் மூலவர் ஸ்ரீ ருத்ரகோடஸ்வரர் திருவருள் கூட்டுகிறார். அம்பிகை தெற்கு நோக்கி அபிராமிநாயகியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வெளியே நந்தி மண்டபம் அழகுற அமைந்துள்ளது. ஆலய வெளிச்சுவற்றில் புடைப்பு சிற்பமாக நந்திதேவர் சுயம்பிரபை தேவியுடன் அருளுகிறார்.




ஸ்ரீ நந்திகேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் நந்தியெம்பெருமானின் மூச்சுக்காற்றால் பூமியில் புதைந்திருக்கும் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.



நான்கு நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. இச்சிவாலயம்.
நால்வர் பெருமக்களில் திருநாவுக்கரசுப் பெருமானால் வைப்புத் தலமாக பாடல் பெற்ற ஆலயம் ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயமாகும் ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். கோடி உருத்திரர்கள் தனித்தனியாக சிவலிங்கம் வைத்து பூஜித்த தலம் ஸ்ரீ ருத்திரகோடீஸ்வரர் தலமாகும்.
-திருக்கயிலையில் வாசம் செய்யும் எம்பெருமான் பரமேஸ்வரனிடம் திருநந்திதேவர் பூலோகத்தில் இருக்கின்ற உருத்திரகோடி தலத்தின் பெருமைகளை அறிய வேண்டி விக்ஞாபனம் செய்கிறார். எம்பெருமான் பரமேஸ்வான் இப்பூவுலகில் யாம் வசிக்கும் 25 தலங்களில் எம் இதய பாகமாக #உருத்திர கோடி தலம் விளங்குகிறது என்றார்.
பூலோகத்தில் அசுரர்களை அழிப்பதற்காக சர்வேஸ்வரன் திருமேனியிலிருந்து பலம் பொருந்திய கோடி உருத்திரர்கள் தோன்றினர். அவர்கள் மிகுந்த தவபலம் பெற்றவர்கள். 32 ஆயுதங்களை ஏந்தியவர்கள் கோடி உருத்திரர்கள் சிவபெருமானை வணங்க இவ்வுலகத்தை காத்து நிற்க எம்பெருமான் ஆணையிட்டார்.
தேவர்கள் அமுதம் பெற வேண்டி பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்தார மலையைப் பெயர்த்தனர். அதன் பாதாளத்திலிருந்து கொடிய அசுரர் கூட்டத்தினர் திரளாக வெளிவந்தனர். பெருமளவில் குடிமக்களை அழித்தும், முனிவர்கள் தவத்தைக் களைத்தும், தேவர்களை துன்புறுத்தியும் முனிவர்கள், தேவர்கள், யோகிகள் அனைவரையும் அழித்து நாசமாக்குகிறார்கள் என்பதை அறிந்து பிரம்மன், இந்திரன், தேவமுனிவர்களுடன் திருக்கயிலை நாதனை துயரத்துடன் வேண்டி துதி செய்தனர். அரக்கர் கூட்டம் அழிவை ஏற்படுத்தி வானுலகம், பூவுலகம் அழியத் தொடங்கி விட்டன என்று சிவபெருமானிடம் வேண்டி நிற்க சிவபெருமான் கோடி உருத்திரர்களை அழைத்து அசுரர்களை அழிக்க ஆணை இடுகிறார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று அசுரர்களை கோடி உருத்திரர்கள் அடியோடு அழிக்கின்றனர்.
சிவபெருமானிடம் கோடி உருத்திரர்களும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்க வழி கேட்டனர். சிவபெருமானும் அதற்கு உருத்திரர்கள் ஒவ்வொருவரும் என்னை நித்தமும் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்தால் எத்தகைய கொடிய பாவங்களும் நீங்கிவிடும் என்றார். #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள #வேதகிரிமலையே அதற்கு தகுந்த தலம் என்று சிவபெருமான் கூற கோடி உருத்திரர்களும் வேதமலையில் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்ததன் பயனாக அவர்கள் அனைவரின் பாவங்களும் நீங்கப்பெற்றனர். உருத்திரர்கள் மஹாதேவனிடம் தங்கள் பெயரிலேயே #தீர்த்தமும் #தலமும் விளங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். - அதன்படியே #ருத்திரகோடிதலம் என்றும் ஈசனுக்கு #ருத்திர கோடீஸ்வர் என்றும் உமையவளுக்கு #ருத்திரகோட்டீஸ்வரி என்றும் #தீர்த்தத்திற்கு #ருத்ரகோடி தீர்த்தம் எனவும் பெயர் பெற்று விளங்கலாயிற்று.காசி அம்பலம் கமலை சோணாசலம் காஞ்சி மாசில் காளத்தி மதுரையம்பதி அங்க மோசையார் கால் கோடி ருத்திரர் வந்தியற்றும் பூசை மாத்தலம் நமக்கென்றும் இதய புண்டரிதம் என திருவாக்கு அருளினார். காசி மாநகர் தில்லை, திருவாரூர், காஞ்சிபுரம் குற்றமற்ற காளத்தி மற்றும் மதுரை போன்றவை எமது உடல் பாகமாக உள்ளது. ஓசையெழ ஒலிக்கின்ற கழல்களை அணிந்த கோடி ருத்திரர்கள் வழிபட்ட இவ்விடம் இதய பகுதியாகும். இங்கு எம்மை தரிசிப்பவர்கள் பெறும் பேற்றினை இம்மையிலும் மறுமையிலும் அடைவார்கள் என்றார் ஈசனார்.
காழிக் காலத்தில் உலக உயிர்களை எல்லாம் தன்னுள் ஒடுக்கிய ஈசனை கயிலையில் காண்பதற்கு திருப்பாற்கடலிருந்து மஹாவிஷ்னு கருட வாகனத்தின் மீதேறி வந்தார். கயிலையின் முதற்கோபுர வாயிலில் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு நந்தியெம்பெருமானை வணங்கி உள்ளே பரமேஸ்வரனை தரிசிக்கிறார். #சிவபெருமானும் தன்னை பணிந்து நிற்கும் மஹாவிஷ்ணுவை தன் அருட்பார்வையால் ஆசிர்வதிக்கிறார். அப்போது முன் கோபுர வாயிலில் இருந்த #கருடாழ்வார் அகந்தையால் #நந்தியம் பெருமானை நோக்கி நீ இரந்து பிச்சை எடுத்து உண்பவன் வாகனம். நீ என்னை கோபித்து என்ன செய்ய முடியும் என கேட்டார். எல்லாம் வல்ல #சிவபெருமானை நிந்தித்து பேசியதாக நந்தியம்பெருமான் கடும் கோபம் கொண்டார். எல்லாம் திசைகளும் கலங்கியது தேவர்கள் திகைத்தனர். சிவநிந்தை செய்த கருடனை கொன்று விடுகிறேன் என்று நந்தியம்பெருமான் பெருமூச்சு விட்டார். அந்த மூச்சுக்காற்றில் கருடன் நூறு காத தூரம் உருண்டு போனார். மீண்டும் நந்திதேவர் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க நாசி துவாரத்தில் வருந்தியது கருடன். அப்படியும் கருடனின் அகந்தை அடங்கவில்லை. நந்தியின் சுவாசக் காற்றோ உலகம் அழியும்போது உண்டாகும் காற்றினைப்போல் கருடனைத் தூக்கி வீசியது. கருடனின் உடல் நொறுங்கியது. சிறகுகள் ஒடிந்தன. கருடன் செய்வதறியாது கலங்கி நந்தியின் மகிமையை அறியாமல் கெட்டேனே நாராயணா | வாசுதேவா | கமலக்கண்ணா என்று ஓலமிட என்னை காப்பாற்று என கதறிய கருடனின் குரல் கேட்ட மஹாவிஷ்ணுவிற்கு விபரீதம் புரிந்து விட்டது.
#மஹாவிஷ்னு #பரமேஸ்வானிடம் கருடன் அகங்காரத்தால் #நந்தியெம்பெருமானின் கோபத்திற்கு ஆட்பட்டு கஷ்டப்படுகிறான். தேவரீர் உளம் கனிந்து கருடனை மன்னித்து விடுவிக்க நந்திதேவருக்கு உத்திரவிடவேண்டும் என வேண்ட, #சிவபெருமான் நந்தியெம்பெருமானை அழைத்து கருடன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்துவிடச் சொன்னார். ஆனால் நந்தியம்பெருமான் "#சிவபெருமானை நிந்தித்த கருடனை விடேன் என்று கூறினார்.
சிவபெருமான் கட்டளையை மறுத்துக் கூறியதால் சிவ அபராதத்திற்கு ஆளாகி விட்டோமோ என்று சிவனிடம் நந்திதேவர் சிவகட்டளையை மீறிய பாவம் நீங்க வழிசொல்ல வேண்டும் என்று வேண்டுகிறார். நந்தியம்பெருமான் செய்த சிவ அபராதத்திற்கு பூலோகத்தில் #உருத்திரகோடி தலத்திற்கு சென்று அங்குள்ள #உருத்திர கோடிஸ்வாரை வில்வத்தால் அர்ச்சிக்கால் சிவ அபராதம் நீங்கும் என்றார். அதன்படி நந்திதேவரும் வில்வத்தால் #சிவபெருமானை அர்ச்சித்து சிவஅபராதம் நீங்கப்பெற்று பரம்பொருளின் அண்மையை அடைகிறார். அதற்கு அடையாளமாக இன்றும் இந்த ஆலய கோபுரத்தின் கற்கார சுவற்றில் #பெருநந்தி தேவனார் மற்றும் #சுயம்பிரபை தேவியும் கைகூப்பியபடி வீற்றிருக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

#ருத்திரகோடி ஆலயத்தில் வாயிலில் உள்ள பெரிய நந்திதேவரின் முன்புறம் நுழைவு வாயிலின் ஓரம் சுமார் ஒன்றரை அடி உயரம் பூமியில் புதையுண்ணட கருடாழ்வார் சிலையைக் காணலாம்.
இச்சிவாலயத்தின் தல விருட்சம் வாழைமரம். ஆலயத்தில் #பத்ராட்ச மரம் உள்ளது. இந்த மரம் காய்ப்பதில்லை. பூக்கள் மட்டும் பூக்கிறது. இந்த மரம் உருத்திராட்ச பரத்தின் வகையைச் சார்ந்ததாகும். #திருக்கழுக்குன்றம் மலைமீது #வேதகிரீஸ்வரர் ஆலயமும் கீழே #பக்தவச்சலேஸ்வரர் ஆலயமும், #தீர்த்தகிரீஸ்வரர் ஆலயமும், 2 கி.மீட்டர் தூரத்தில் #ருத்திரகோடிஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த நான்கு ஆலயங்களின் தல விருட்சம் வாழை மரமாகும். நாம் ஒருமுறை செயத தானத்தையும், ஜெபத்தையும் கோடிமுறை செய்த பலனாக நமக்குத் தருபவர் #ருத்ரகோடீஸ்வரர்.
ஒருவர் கோடி முறை பாவங்கள் செய்திருந்தாலும் #ருத்திரகோடீஸ்வரரிடம் தனது தவறுகளை உணர்ந்து வேண்டிக் கொள்வதன் மூலம் அனைத்து பாவங்களையும் கணத்தில் போக்கிடுவார்.#ருத்திரகோட்டீஸ்வரரிடம் பாவ மன்னிப்பு பெற்ற பின்னர் மீண்டும் எந்த பாவங்களையும் செய்யக்கூடாது.அப்படியே பாவங்கள் செய்தாலும் எத்தனை பிறவி எடுத்தாலும் பாவங்களிலிருந்து விடுபட இயலாது என்பது உறுதி.இப்படியாக கோடி ருத்திரர்கள் அசுரர்களை கொன்ற பாவங்களை போக்கியும் கருடாழ்வரின் அகந்தையை அடக்கிய நந்திதேவரின் சிவஅபராதத்தினை போக்கியும் கருணை புரிந்து எம்பெருமான் #ஶ்ரீருத்திரகோட்டீஸ்வரரை வணங்கி நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்தபாவங்களை அகற்றிட அவன் ஆலயம் நாடிச்செல்வோம்..நலம்பெறுவோம்..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-ஆன்மீக மலர் மார்ச் 1-15 இதழில் #திருக்கழுக்குன்றம்.

 #திருக்கழுக்குன்றம்:-ஆன்மீக மலரில் #திருக்கழுக்குன்றம்.

ஆன்மிக மலர் மார்ச் 1-15 இதழில் #திருக்கழுக்குன்றம் பற்றிய தகவல் வந்துள்ளது.
இணையத்தில் காண:-https://aanmeegamalar.com/.../Aanmeegamalar%201-15...








பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-#திருக்கழுக்குன்றம் புண்ணிய தீர்த்தங்கள் பற்றி #ஆன்மீகமலரில் .

 #திருக்கழுக்குன்றம்:-#திருக்கழுக்குன்றம் புண்ணிய தீர்த்தங்கள் பற்றி #ஆன்மீகமலரில் ..







#திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தங்கள் பற்றி இம்மாத ஆன்மீக மலரில் கட்டுரை வந்துள்ளது.


இணையத்தில் காண:-https://www.aanmeegamalar.com/.../Aanmeegamalar%2016-28...

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்