திருக்கழுக்குன்றம்:-1933-ல் வெளிவந்த #மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது ஊர்

திருக்கழுக்குன்றம்:-1933-ல் வெளிவந்த மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது ஊர்...
1933 ஆம் வருடம் வெளிவந்த #மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது #திருக்கழுக்குன்றம் பற்றி பாடம் வெளிவந்துள்ளது. புத்தகத்தின் விலை 5 அணா..புத்தகத்தில் நமது ஊர் அருமை -பெருமைகளைபதிவிட்டுள்ளார்கள்







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.

#திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் #திருக்கழுக்குன்றம்.



திருக்கழுக்குன்றம் பற்றி மலையாள யூடியூபில் வந்துள்ள தகவல்..
நமதுஊர்..நமதுபெருமை..

வாழ்கவளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சோமஸ்கந்தர் மண்டபமும் -தஞ்சாவூர் பெரியகோவிலும்.

திருக்கழுக்குன்றம்:-சோமஸ்கந்தர் மண்டபமும் -தஞ்சாவூர் பெரியகோவிலும்.


திருக்கழுக்குன்றம் பெரியகோயிலில் உள்ள சோமஸகந்தர் ஆலயம் அனைவரும் அறிந்ததே...இங்குள்ள சோமஸ்கந்தர் ஆலயம் தஞ்சாவூர் பெரியகோயிலின் தோற்றத்தில் அமைந்துள்ளது.தஞ்சாவூர் பெரியகோயிலின் அமைப்பினை போலவே திருக்கழுக்குன்றம் சோமஸ்கந்தரின் ஆலயமும் அமைத்துள்ளார்கள். கோபுரம் -நீண்ட வரண்டா -முன்புறம் உள்ள படிக்கட்டுக்கள்-பக்கவாட்டில் அமைந்துள்ள படிக்கட்டுக்கள். முன்புறம் உள்ள சிறிய மண்டபம் (இவைகளின் தூய தமிழ்பெயர் தெரியவில்லை)அனைத்தும் தஞ்சைபெரியகோயிலின் அமைப்பிலேயே அமைந்துள்ளதினை நீங்கள் காணலாம்.அடுத்த முறை கோயிலுக்கு செல்கையில் இதனை அவசியம் காணுங்கள.இரண்டு ஆலய படங்களும் உங்கள் பார்வைக்கு...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-மாசி மகம் சந்திர தரிசனம்.

#திருக்கழுக்குன்றம்:-மாசி மகம் #சந்திர தரிசனம்.






10.03.2020 செவ்வாய் கிழமை காலையில் #பூரண நிலவு தனது பணியினை முடித்து #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் மறையும் கண்கொள்ளாகாட்சி;....#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன் #வேலன். புகைப்படம் ;உதவி:-#Raaja Raajan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சித்திரைப்பெருவிழா..





#திருக்கழுக்குன்றம் அருள்மிகு #வேதகிரீஸ்வரருக்கு #சித்திரைப்பெருவிழா நடைபெறஉள்ளது.வருகின்ற 27.04.2020 #திங்கள்கிழமை அன்று காலை கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 07.05.2020 #வியாழக்கிழமை அன்று நிறைவடைகின்றது. இது உத்தேச கால அட்டவணைதான். கோயில் நிர்வாகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ திருவிழா பத்திரிக்கை விரைவில் வெளியிடப்படும்.#அனைவரும் வருக..#இறைவன்அருள்பெருக..
புகைப்படங்கள் உதவி:-Raaja Raajan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.

திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.
#திருக்கழுக்குன்றம்:-
மலையின் பெயரால் வழங்கப்படும் ஊர்களில் திருப்பரங்குன்றம் போல் திருக்கழுக்குன்றம் ஒன்று ஆகும். குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு மாறாக இங்கு ஈஸ்வரன்எழுந்தருளியுள்ளார். கழு என்றால் சூலம் என பொருள். இங்குள்ள மலையை தூரத்திலிருந்து பார்க்கையில் சூலத்தின் மூன்று முனைகளை போல மலை தோன்றுவதால் கழுக்குன்றம் என பெயர்வந்த்கவும் கூறுவார்கள். கழுகு பூசித்ததால் கழுக்குன்றம் என அழைப்பார்கள்.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெயர்மாறாமல் உள்ள ஊர் என்கின்ற பெருமையுடயது நமது #திருக்கழுக்குன்றம்.
நண்பகலில் பட்சிகள் வந்து உணவு உண்பதால் வடநாட்டவர்களால் #பக்‌ஷீதீர்த்தம் என அழைக்கப்படுகின்றது

.
நான்கு வேதங்கள் மலை வடிவெடுத்து இங்குள்ள ஈசனை வழிபட்டதால் இந்த ஊரினை #வேதகிரி என்றும் அழைப்பார்கள்.
"ஆகமுடன் சம்பாதி அனுதினமும் வந்துதொழும் நாகபரன் வேதகிரி " என்றும்
அட்டதிக்கும் வேதகிரி என்றும் புராணச்செய்திகள் தெரிவிக்கின்றன..
உருத்திரகோடி சேத்திரம்:-
உலகிற்கு துன்பம் அளித்த அரக்கர்களைக் கொன்று உருத்திர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு நற்பெயர் பெற்றதால் #உருத்திரகோடி சேத்திரம் என நமது ஊர் அழைக்கப்படுகின்றது
.
நந்திதேவர் வந்து வழிபட்டு உய்தி பெற்றதால் #நந்திபுரி என அழைக்கப்படுகின்றது.

இந்திரன் இங்கே வந்து தொழுத்ல் #இந்திரபுரி என அழைக்கப்படுகின்றது. இங்கு இந்திரன்வந்து சிவனை அபிஷேகம் செய்வது இடிஅபிஷேகம் என அழைக்கப்படுகின்றது.

தேவர்களுக்கு பகைவர்களான அரக்கர்கள் ஒருமுறை பிருகு முனிவரிடன் அடைக்கலம் புகுந்தனர்.பிருகு முனிவர் இல்லாத சமயத்தில் வந்த விஷணு பிருகு முனிவரின் மனைவியிடம ;அரக்கர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூற சினம் கொண்ட விஷ்ணு அனைவரையும் அழித்து முனிவரின் மனைவியையும் ஆசிரமத்துடன் எரித்துவிட்டார். இதை அறிந்த பிருகு முனிவர் விஷ்ணுவிற்கு சாபம் அளித்தார்.பெண்ணை கொன்ற பாவம ;நீங்க வேதகிரிக்கு வந்து இறைவனை நோக்கி தவம் செய்யும்படி பிருகுமுனிவர் கூற அதன்படி விஷ்ணுவும் தவம்செய்து பாவம் நீங்கபெற்றார். விஷ்ணு வழிபட்ட இந்த தலம் #நாராயணபுரம் என பெயர்பெற்றது.

சாவித்திரி.சரஸ்வதி என்கின்ற இரண்டு மனைவியருள் பிரம்மன் சரஸ்வதியிடம் மட்டும் மிகுந்த ஆசையுடையவனாக இருந்த்த கண்ட சாவித்திரி வேதங்கள் உம்மைவிட்டு நீங்கட்டும் என சபித்தாள்.அதற்கேற்ப மது.கைடபர் என்னும் இராட்சதர்களிடம் நான்முகனாகிய பிரம்மா சிக்கி துன்பத்திற்கு ஆளானார். அப்போது திருமால் பிரம்மன் முன்பாக வந்து #வேதமலை மீது வீற்றிருக்கும் #வேதகிரி நாதரை வழிபட உமது சாபம் நீங்கும் என்றார். நான்முகனும் அவ்வாறே பூஜிக்க இறைவன் அருளால் சாபம் நீங்கியதுடன் வேதங்களுடன் சாவித்திரியையும் அழைத்துக்கொண்டு பிரம்பலோகம் சென்றார்.எனவே நமது ஊர் #பிரம்புரி என்றும ;அழைக்கப்படுகின்றது.
சூரியனாகிய தினகரன் இங்கே சிவனை வழிபட்டதால் #தினகாபுரி என அழைக்கப்படுகின்றது;.
பாணினியின் வியாகரணத்தைக் கேட்டு தெளிவு பெறாத சில முனிவர்தான் தெளிவு பெற இந்த ஊரினை அடைந்து இறைவனை தொழுது தெளிவுபெற்றதால் #முனிகணபுரி என அழைக்கப்படுகின்றது:
.
முதலாம் இராசேந்திரன் காலந்தொட்டு #திருக்கழுக்குன்றம் என்கின்ற பெயருடன் #உலகலந்த சோழபுரம் என்கின்ற பெயரும் வழங்கிவந்துள்ளது;.
#திருக்கழுக்குன்றநாயனார்.#திருக்கழுக்குன்றமுடையார்#திருமலையாளுடைய தேவர்,#மலைமேல் முலத்தானத்துப் பெருமானடிகள்.#திருமலை மேல உடையார்.#ஶ்ரீமூலஸ்தானத்து தேசவிடங்க தேவர் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இதுதவிர #சிவபுரம்,#கதலிவனம்,#கழுகாசலம்.#கங்காசலம்.#உருத்திரகிரி.#மறைக்காடு.#வேதபொற்றை.#சுருதிமலை.#திருமலை,#வேதநாராயணபுரம் போன்ற பெயர்களால் நமது ஊர் அழைக்கப்படுகின்றது. எனக்கு கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளேன்..இதுதவிர வேறுபெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும். இணைத்துக்கொள்கின்றேன்..
நமது ஊர்..நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#திருக்கழுக்குன்றம்.#வேலன்.#thirukazhukundram.#velan.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-ரோப்கார் .




திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு சாலைவசதி வேண்டும் என நாளிதழில் செய்தி வந்தது.வயதானவர்கள் -உடல் ஊனமுற்றவர்கள் இறைவனை காணவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் இருக்கும் மலையை அழித்து மரங்களை வெட்டி அவ்வாறான சாலை வசதி அவசியமா? அவசியம் வாகன வசதி வேண்டும் என்றால் ரோப் கார் வசதி கொண்டுவரலாமே...
ரோப் கார் வசதிக்காக குறைந்த அளவே இடம் தேவைப்படும்.
தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுற்றுலா விடுதியிலிருந்து மலைமீது உள்ள குடிநீர் தொடடி அமைந்துள்ள இடம்வரையில் செல்லும் வரை பாதை அமைக்கலாம்.(மலைக்கோயிலுக்கு செல்ல முந்தைய காலத்தில் இந்த வழிதடத்தில் படிக்கெட்டு இருந்துள்ளது.)
ரோப்கார் வசதி மூலம் கோயில் நிர்வாகத்திற்கு அதிகஅளவில் வருமானம் வரும்.
மலைமீது கோயில் ;திறந்திருக்கும் நேரம் ரோப்கார் நிலையம் திறந்து கோயில் நடை சாத்தியதும் ரோப்கார் நிலையத்தினை மூடிவிடலாம்.
சுற்றுச்சூழல் பாதிப்படையாது.முக்கியமாக மரங்கள் மூலிகை வனம் காக்கப்படும்.
தமிழ்நாட்டில் பழனிகோயிலுக்கு அடுத்து நமது கோயில் ரோப் கார் மூலம் பிரபலமடையும்.
ரோப்காரில் பயணிக்கவே சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள்.
மலைமீது சாலை அமைத்தால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம் ஏற்படும்.#ரோப் கார் பயன்படுத்துவது மூலம் விபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.
கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது..இறைவனை காண கஷ்டப்படடுதான் படி ஏற வேண்டும்
நவீன போக்குவரத்து வசதிகள் கட்டாயம் தேவையில்லை..
நவீன வசதிகள் கட்டாயம் கொண்டுவரவேண்டும் என அரசு நினைத்தால் ரோப் கார் வசதியை கொண்டுவருவது பற்றி யோசிக்கலாமே..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்