திருக்கழுக்குன்றம்-மலைக்கோயில் அறிந்த சிலை அறியாத தகவல்.
திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் செல்கையில் மூலஸ்தானத்திற்கு முன்உள்ள படி ஏறும் சமயம் வலது மற்றும் இடது புறம் சிலைகள் உள்ளது. அதில் வினாயகர்,முருகர்,துவார பாலகர்,சங்கநிதி மற்றும் பதுமநிதி சிலைகள் உள்ளது. கையில் சங்கு உள்ள சிற்பம் சங்கநிதி என்றும் தாமரை மலர் வைத்துள்ள சிற்பம் பதுமநிதி என்றும் அழைக்கப்படுகின்றது.குபேரன் மகன்களாக சங்கநிதி மற்றும் பதுமநிதி அழைக்கப்படுகின்றர். குபேரனின் அனைத்து படங்களிலும் இவர்களை காணலாம்.இறைவனை வணங்குகையில் இவர்களையும் வணங்கினால் நமக்கு குபேரனின் அருள்கிட்டும்.
நமதுஊர்...நமதுபெருமை..