வேலன்:-அன்னதானம் வழங்க அனுமதி வேண்டும்.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்சதீப மற்றும் புஷ்கரமேளாவிற்கு அன்னதானம் வழங்க உள்ளவர்கள் அதற்கான முறையான அனுமதிபெற்றே அன்னதானம் வழங்கவேண்டும்.
வேண்டுதலுக்காகவும். பிரார்தனை நிறைவேற்றுதலுக்காகவும்.இன்னபிற காரணங்களுக்காகவும் பக்தர்கள் அன்னதானம் வழங்குகின்றனர். பல லட்சம் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும். மக்களுக்கு உடல் பாதிப்பு வருவதை தடுக்கும் வகையிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சில வரையறையை வகுத்துள்ளார்கள். அதன்படி 
1.அன்னதானம் வழங்கும் நபர்கள் அவர்களுடைய பாஸ்பேர் புகைப்படம்-1 மற்றும் ரேஷன் கார்ட் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி விண்ணப்பம் சமர்பிக்கவேண்டும். மேலும் சார்நிலை கருவூலத்தில் ரூபாய் 100- ஐ செலுத்தி அதற்கான ரசீதையும் இணைக்கவேண்டும். இவ்வாறு வாங்கப்படும் அனுமதி ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.திருக்க்குகழுன்றத்தில் நடைபெறும் எந்த விஷேஷங்களுக்கும் அன்னதானம் வழங்க - ஒரு வருடத்திற்கு இந்த அனுமதிக்கடிதம் போதுமானது
2..இதேப்போல காஞ்சிபுரம் மாவட்டதில் நடைபெறுகின்ற அனைத்து கோயில்களுக்கும் நீங்கள் அன்னதானம் வழங்க விரும்பினால்இதே வரைமுறையை பயன்படுத்தலாம் ஆனால் கருவூலத்தில் ரூபாய் 100க் கு பதில் ரூபாய் 2000 செலுத்தவேண்டும்.
3. அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் நீங்கள் வழங்கும் அன்னதானத்திலிருந்து ஒரு பாக்கெட் உணவினை தனியே எடுத்துவைத்துவிடவேண்டும். 
4. உணவினை தயாரித்து ஆறுமணிநேரத்திற்குள் அதனை வினியோகம் செய்துவிடவேண்டும்.
5. சூடாக உணவினை பாக்கெட் செய்திடல் கூடாது.
6. உணவு வழங்கும் இடத்தில் தண்ணீர்வசதியும் குப்பைகளை போடுவதற்கு குப்பைகூடை வசதியையும் செய்திட வேண்டும்.
6. அதிகமான மக்கள் கூடுவதால் நீங்கள் அன்னதானம் வழங்கும் இடத்தினை முன்னரே அலுவலர்களிடம்தெரிவித்துவிடவேண்டும்.
7. அன்னதானம் வழங்குவதற்கு ஒவ்வொரு உணவிற்கும் தனிதனிகரண்டி பயன்படுத்தவேண்டும்.
8.உணவு வழங்குபவர் கைகளில் கைஉறை அணிய வேண்டும்.
9. அன்னதானம் செய்வதற்கு தரமான பொருட்களையே பயன்படுத்துங்கள். தரமில்லா பொருளில் தயாரித்து 100 பேருக்கு வழங்குவதை விடதரமாக தயாரித்து 50 பேருக்கு வழங்குவதே புண்ணியமாகும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் மற்றும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட எண்ணில்தொடர்பு கொள்ளவும். 
செல்பேசி எண்:-9965626599

நமது ஊர் ..நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை...
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக