திருக்கழுக்குன்றம்:-நமதுஊர் கழுகுகள் பற்றி டெக்கான் ஹெரால்ட் ஆங்கில இதழில் வெளிவந்துள்ள கட்டுரை -தமிழாக்கம்.

 திருக்கழுக்குன்றம்:-நமதுஊர் கழுகுகள் பற்றி டெக்கான் ஹெரால்ட் ஆங்கில இதழில் வெளிவந்துள்ள கட்டுரை -தமிழாக்கம்.


சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்திதாள்களில் ஜெய்பூரிலிருந்து மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் நோய்வாய்பட்ட கழுகுகள் எடுத்துச்செல்லப்படுவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டன. இந்தியாவில் 97 சதவீதமாக கழுகுகள் அழிந்துவிட்டன.
ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கியோலாடியோ சரணாயலத்தில் இனப்பெருக்க காலத்தில் முந்தைய ஆண்டில் 350 கூடுகளுடன் ஒப்பிடும்போது 1999 ல் வெறும் 20 கூடுகள் மட்டுமே காணப்பட்டன.கழுகுகள் 50 முதல் 60 ஆண்டுகள் வரையிலான ஆயூட்காலம் கொண்டவை. அவைகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுட்டை இடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
கழுகுகளின் இந்த பற்றாக்குறை நகர்புற மற்றும் கிராப்புற வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது.மேலும் மும்பையில் பார்சி சமூகம் அதன் புனிதமான டவர்ஸ்ஆப் சைலன்ஸ்(இறந்தவர்களின் கழுகுகளால் சாப்பிடுவதன் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றது) கழுகுகள் புதிய கழுகுகள் தொடங்க நினைத்து வருகின்றது.ஆனால் இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலாமான கழுகுகள் காணமல் போனதை அனைவரும் மறந்துவிட்டார்கள்.தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்சிதீர்த்தம் கோயில்-பட்சிதீர்த்தத்தின் தமிழ்பெயர் –#திருக்கழுக்குன்றம்.அதாவது #புனித கழுகுகளின் மலை சன்னதி.
1992 ஆம் ஆண்டு வரை சரியாக காலை 11.50 மணி அளவில் இரண்டு கழுகுகள் சிவனின் மலை ஆலயத்தை சுற்றி வளைத்து மலை சன்னதியில் பாறையின் மீது இறங்குகின்றன. அங்கு தேசிகர் கோயில் பிரசாதத்துடன் அவைகளுக்காக காத்திருப்பார்.பாரம்பரியத்தின்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளபடி குறைந்தது 328 ஆண்டுகளாக இரண்டு கழுகுகள் #திருக்கழுக்குன்றத்தில் உள்ள புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு மரியாதை அறித்து வருகின்றன.
1670 ஆம் ஆண்டில் இந்த கோயிலுக்கு வந்த டச்சு பார்வையாளர்கள் கோயில் தேசிகர் வழங்கிய உணவை உண்ணுவதற்காக வானத்திலிருந்து இறங்கும் இரண்டு கழுகுகளையும் கண்டனர்.மேலும் 1992 ஆம் ஆண்டு வரை பொதுமக்கள் தினசரி உணவுக்காக வரும் இரண்டு கழுகுகளையும் புகைப்படம் எடுத்துவந்தனர். தினசரி மதிய நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சில மீட்டர் தூரத்தில் தள்ளியிருந்து பட்சிகளை தரிசித்து வந்தனர். 1992 ஆம் ஆண்டிலிருந்து பட்சிகள் தோன்ற தவறிவிட்டன.இதுவரை பட்சிகள் வரவில்லை.கழுகுகள் தோன்றவே இல்லை.கழுகுகள் வருவதற்கு முன்னர் தேசிகர் கழுகுகளுக்கு சக்கரைப்பொங்கல் கொடுப்பதற்கு சக்கரைப்பொங்களுடன் கழுகுகளுக்காக காத்திருப்பார். கழுகுகள் காணப்பட்டதும் பார்க்கும் பக்தர்களிடையே திடீரென உற்சாகம் பிறக்கும். சத்தமாக இருந்தால் சத்தத்தின் மத்தியில் கழுகுகள் தரையிறக்க மறுக்கும். பிறகு அனைவரும் மவுனமாகி விடுவார்கள்.சுற்றுசூழல் அமைதியான பின்னர் கழுகுகள் மெதுவாக தரையிறங்கும்.உணவு உண்டபின்னர் பறந்து செல்லும்.
உள்ளுர் ஸ்தல புராணம் (அல்லது மதவரலாறு) கூறியுள்ளதுபடி இந்த இரண்டு கழுகுகள் பூஷா மற்றும் விதாதா ஆகிய இரண்டு புகழ்பெற்ற புனிதர்கள் அவர்கள் ஆணவத்தில் சிவபெருமான் கொடுத்த வரத்தை அவர்களின் தவத்திற்கான வெகுமதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் சிவபெருமானால் சபிக்கபட்பட்டனர். மனம் திருந்திய முனிவர்கள் தங்களை மன்னிக்குமாறு கொஞ்சியபோது அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கழுகு வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும் பட்சிதீர்த்தில் உள்ள கோயிலின் பிரசாத்ததை சாப்பிட்டதிலிருந்து அவர்ககளின் விடுதலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
புராணக்கதைகளில் கழுகுகள் பெனாரஸில் (வாரணாசி எனப்படும் காசி)உள்ள கங்கையில் குளிக்கின்றன.பட்சிதீர்த்தத்தில் உணவுஉட்கொள்கின்றன.மாலை உணவுக்காக இராமேஸ்வரம் செல்கின்றன.இரவில் மீண்டும் காசிக்கு திரும்புகின்றன.சாத்தியமில்லாத சாதனை. ஆனால் உண்மை அதுதான். #திருக்கழுக்குன்றத்தில் மதிய உணவிற்காக இரண்டு கழுகுகளுக்கு மேல் வந்ததாக எந்த பதிவும் இல்லை.
#திருஞான சம்பந்தர் மற்றும் #திருநாவுக்கரசர் #திருக்கழுக்குன்றத்தினை புகழ்ந்து பாடல்களை பாடியுள்ளனர். இது கழுகுகளின் தினசரி வருகைக்கு சான்றளிக்கின்றது.
1670 ஆம் ஆண்டு கோயிலுக்கு விஜயம் செய்த டச்சு அதிகாரிகள் புகழ்பெற்ற ஜோடி கழுகுகள் மற்றும் அவைகளுக்காக காத்திருந்த பெரும் கூட்டத்தினை பற்றிய பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.மறைந்துவரும் பறவைகளைப்பற்றி விவாதிக்க உள்ளுர்வாசிகளை உருவாக்குவது சாத்தியமில்லை.சில மூத்த குடிமக்கள்1992 க்கு பிறகு கழுகுகள் வராததை குறிப்பிட்டுள்ளனர். வெளிப்படையாக குற்றவாளி முனிவர்கள் தங்கள் தவத்தை முடித்துவிட்டு சொர்க்கத்திற்கு திரும்பியுள்ள பக்தியுள்ள நிலை.இந்த நம்ப முடியாத நிகழ்ச்சியிலிருந்து அனைத்தையும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்க முடியும்.கழுகுகள் அதை விரும்பாமல் மதிய உணவினை தவிர்த்ததாகவும் கூறப்படுகின்றது.
நவீன விவசாய முறைகள் காரணமாக குறிப்பாக கிராமப்புறங்களில் கால்நடைகள் அதிகமாக உட்கொள்ளும் பூச்சிக்கொல்லிகளின் அளவு கழுகுகள் அவற்றின் மீது ஊடுருவி அவைகளின் வாழ்வினை பாதிக்கும். மேலும் கழுகுகளின முட்டைகளின் ஓடு மிகவும் பலவீனமாக இருக்கும். அடைக்காக்கும் காலம் மற்றும் பறவைகளை கொல்வது.எனவே குறிப்பிட்ட பக்தியுள்ள கழுகுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு சந்ததி கழுகுகளும் இருந்திருக்காது.படிப்படியாக புராணகதை கீழே இறக்க வேண்டியிருந்தது.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் #திருக்கழுக்குன்றத்தின் “புனித கழுகுகளின் கதை” கடந்த காலத்தின் கதை.மேலும் விளக்கமுடியாத புராணங்களின் ஒரு கோட்டையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கழுகுகள் வராதது பற்றிய வருத்தங்களுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக