திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல்..

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல்..

1921 ஆம் ஆண்டு வெளிவந்த தேவார சிவதல வெண்பா என்கின்ற நூலில் நமது திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல் வந்துள்ளது.
பாடல்:-
தலமன் கிரியாந் தனைப்பக்தி யோடு
வலமவருவார்க் காணவமுன் வாய்ந்த --மலமென்
வழுக்குன்ற வண்மையாம் வான்கதிநெஞ் சேசீர்க்
கழுக்குன்ற வண்மையாற் காண்.



பாடலின் பொருள்:-
பஞ்ச சக்திகளை நிலையாக கொண்டு நிலையான இடமாக இருக்கின்ற திருக்கழுக்குன்ற மலையை பக்தியோடு சுற்றி வருபவர்களுக்கு ஆணவம்.கன்மம்.மாயை என்கின்ற மும்மலங்களும் நீங்கி வளமையான வானுலகத்தை அடைகின்ற சிறப்புண்டாகும். அவ்வாறான பெருமையும் வளமையும் உடையது திருக்கழுக்குன்றமாகும்.
வாழ்க வளமுடன்

பாடல் விளக்கத்திற்கு உதவி:-திரு.ரவிச்சந்திரன் பூபதி.




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக