திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளக்கரையின் மேற்கு புறத்தில் கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தீவணத்திற்கான தொட்டிகள் அந்த காலத்தில் கட்டி வைத்திருந்தனர்.குளத்தில் இருந்து நீர் இறைத்து தொட்டிகளில் ஊற்றி விடுவார்கள். மாட்டுத்தீவணங்களையும் -வீட்டில் அரிசி கழுவும் நீர் -சாதம் வடிக்கும் தண்ணீரையும் இதர தொட்டிகளில் வந்து ஊற்றிவிட்டு செல்வார்கள். கால்நடைகள் வந்து பசி ஆறி தாகம் தீர்த்து சென்றன. நவீன மயமாக்குதலில் அந்த தொட்டிகள் இடிக்கப்பட்டது. தற்சமயம் வாயில்லா ஜீவன்கள் நீருக்கு தவிக்கின்றன.சில கடைக்காரர்கள் கடையின் ஒரு ஓரமாக கால்நடைகளுக்கு நீர் வைக்கின்றனர். சில வீடுகளில் வசிப்பவர்கள் அரிசி கலையும் நீர் - சாதம் வடிக்கும் தண்ணீரை வைக்கின்றனர்.நால்வர்கோயில் பேட்டையில் வசிக்கும் ஒருவர் தினசரி மாடுகளுக்கு தீவணமும் மற்றும் தண்ணீர் கொடுத்து செல்கின்றார்.நாமும் வாயில்லா ஜீவன்களுக்கு இயன்றதை செய்வோம்...

நமதுஊர்..நமதுதகவல்..
வாழ்கவளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக