திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

 திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

மதுரை.திருவண்ணாமலை.சிதம்பரம் மற்றும் மைலாப்பூர் போன்ற தலங்களில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதுபோல திருக்கழுக்குன்றத்திலும் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.சித்திரை மாதம் துவங்கி பங்குனி மாதம் வரை நடைபெறும் திருவிழாக்களின் விவரம் கீழே:-
சித்திரை மாதம் அமாவாசை திதி கழித்த ஐந்தாம்நாள் திருமலையில் கொடியேற்றி பிரம்மேற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.இதில் 3ஆம் நாள் உற்வசமாக 63 நாயன்மார்கள் வேதகிரீஸ்வரர் மலையை கிரிவலம் வருவார்கள்.ஐந்தாம்நாள் ரிஷப வாகனத்தில் ஸ்வாமி உலா வருவார். ஏழாம்நாள் உற்வசவத்தில் ஸ்வாமி தேரில் மாடவீதி உலா வருவார். பத்தாம் நாள் உற்வசத்தில் இரவில் இராவண வாகனத்தில் ஸ்வாமி மலை வலம் வந்து மலையில் கொடி இறக்கப்படும்.அதன்பிறகு உற்சவருக்கு பத்துநாள் விடாற்றி உற்சவம் கோயிலுக்குள் நடைபெறும்.
மூல நட்சத்திரத்தில் திருஞான சம்பந்தருக்கு உற்சவம்.புனர்பூச நட்சரத்தில் அடிவார உற்சவம் ஆரம்பித்து விசாக நட்சரத்தில் நிறைவடையும். 10 நாள் திருக்கல்யாணம்.ரிஷப வாகன சேவை.(தற்போது இந்த திருக்கல்யாணம் நடைபெறுவது இல்லை)
மக நட்சத்திரத்தில் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் உற்சவம். ஆனிமாதத்தில் மலை அடிவாரத்திலிருந்து திருப்படி விழாவும்

நடைபெறும்.நால்வர் பாடல்களை பாடியபடி அடியார்கள் மலைமீது படியேறுவார்கள்.இந்த உற்சவம் படி ஏற்றுவிழா என அழைக்கப்படுகின்றது.தற்போது பேச்சு வழக்கில் படிஉற்சவம்எனஅழைக்கப்படுகின்றது.முந்தைய காலத்தில் யானை மீது திருமுறைகள் வைத்து மலையை சுற்றி வந்துள்ளார்கள்.உத்திர நட்சரத்திரத்தில் நடராஜர் அபிஸேகம் நடைபெறும்.
ஆடிமாதம் தாழக்கோயிலில் உள்ள திரிபுரசுந்தரி அம்மனுக்கு பரணி நட்சத்திரத்தில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம் ஶ்ரீதிரிபுரசுந்தரிக்குமட்டும் உற்சவம் நடைபெறும்.அம்மன் கோயிலின் முன்உள்ள கொடிமரத்தில்கொடி ஏற்றப்படும்..பதினோறு நாள் உற்சவத்தில் அம்மன் விதவிதமான அலங்காரங்களில் விதவிதமான வாகனங்களில் பவனி வருவார். 11 ஆம் நாள் ஆடி உத்திரத்தன்று சர்வாங்க அபிஷேகம் -திருக்கல்யாணம்-பஞ்ச மூர்த்திகள் வீதி உற்சவம் நடைபெறும்.ஆடிப்பூர நட்சத்திரத்தன்று சுந்தரபெருமானுக்கு உற்சவம் நடைபெறும்.
ஆவணி மூல நட்சத்திரத்தன்று மலை மீது உள்ள சுவாமிக்கு விழா நடைபெறும் இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த படலம் நினைவாக நடைபெறும். இறைவன் ஆமை மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்படும். தாழக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தியே உற்சவ மூர்த்தியாவார் ஆவணி சதுர்த்தி திதியில் வினாயகர் உற்சவம் நடைபெறும். வினாயகர் வீதி உலா நடைபெறும்.

புரட்டாசி விழா மற்ற கோயில்களில் நடைபெறுவதுபோலவே மிக சிறப்பாக நடைபெறுகின்றது.பலவிதமான அலங்காரங்கள் அம்மனுக்கு செய்யப்படும். நவராத்திரி உற்சவம். 9 நாட்கள் அபிஷேக அலங்கார தூப தீப நைவேய்திய ஆராதனை.9 ஆம் நாள் நவமி அன்று மூலஸ்தான அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம் நடைபெறும் விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டை அருகே உள்ள வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.
ஶ்ரீமகா கந்த சஷ்டி உற்சவம் 6 நாட்கள் நடைபெறும்.ஆறு நாட்களும் தாழக்கோயில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை உற்சவம் நடைபெறும்.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் அன்று ஸ்வாமிக்கு அன்னபிஷேகம் திருமலையிலும் தாழக்கோயிலிலும் உருத்திரான்கோயிலிலும் நடைபெறும். .இறைவன் மீது சாற்றிய அன்னம் பிறகு பக்தர்களுக்கும் நீர்நிலைகளிலும் கரைக்கப்படும்.
கார்த்திகை பரணி தீபம் சிறப்பாக நடைபெறும்.பெளர்ணமியில் தீபேற்சவம்.பஞ்ச மூர்த்திகள் வீதி உலா..இரவு சொக்கபனை நிகழ்ச்சி நடைபெறும் கார்திகை மாதம் கடைசி சோமவாரம்(திங்கள்கிழமை) மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரருக்கு மதியம் 1 மணிக்கு மேல் 1008 மஹா சங்காபிஷேகம் நடைபெறும்.
ஶ்ரீ மாணிக்கவாசகர் 10 நாள் உற்சவம். கடைசி நாள் திருவாதிரையில் ஶ்ரீநடராஸ மூர்த்திக்கு மஹா அபிஷேகம்-வீதி உலா உற்சவம் நடைபெறும் மார்கழி திருவாதிரையாகிய ஆரூத்ரா தரிசனம் சிதம்பரத்தில் நடைபெறுவதுபோல இங்கு நடைபெறுவது விஷேஷமாகும்.

பூச நட்சத்திரத்தில் சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். சந்திரசேகரர் அம்பாளுடன் சங்குதீர்த்த குளத்தினை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். மறுநாள் ரிஷப தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் அம்பாளுடன் வந்து குளத்தினை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் தெப்பல் உற்சவம் நடைபெறும்.


மகம் நட்சத்திரத்தில் ஸ்வாமி சங்கு தீர்த்த்ததில் காலையில் தீர்த்தம். மாலையில் ரிஷப வாகன சேவை.

உத்திரம் நட்சத்திரத்தில் ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம்.திருக்கல்யாணம். ரிஷப வாகன சேவை நடைபெறும்.
சிறப்பு அபிஷேகம்:-
ஆவணி அவிட்டம் முதல் கார்த்திகை மாத்திற்குள் திருமலையில் பவித்ரோற்சவம் வசதிக்கு ஏற்றபடி தோதான நாளில் செய்யப்படும்.
தாழக்கோயில் தினசரி காலை 6.00 மணிக்கு கோயில் திறந்து மதியம் 1.00 மணி வரையிலும் மாலை 4.00 மணிக்கு கோயில திறந்து இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். திருவிழா காலங்களில் உற்சவ காலங்களில் கோயில் திறக்கும் நேரம் மாறுபடும். மலைக்கோயில் காலை 8.30 க்கு திறந்து மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்;.
புகைப்பட உதவி:-
Raaja Raajan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக