திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.

 திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை மீது இந்த நரிக்குளம் இருப்பது பெரும்பாலனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான்கு வேதங்கள் அமைந்துள்ள மலைத்தொடரில் வேதகிரி மலைக்கும் அடுத்த மலைக்கும் நடுவில் இந்த குளம் அமைந்துள்ள இது நரிக்குளம் என அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய ருத்ர தீர்த்தம்(ருத்திரன்கோயில்) அளவிற்கு இது அமைந்துள்ளது. சுலபமாக யாரும் சென்று பார்க்க முடியாது. சுற்றிலும் தொரட்டு முள்களால் ஆன புதர்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரியபெரிய நீளமுடைய நல்லபாம்புகளும் விஷமுள்ள பாம்புகளும் சர்வசாதாரணமாக நடமாடுவதை காணலாம். அதனாலேயே பொதுமக்கள் அதிகம் அந்த குளத்தினை சென்று பார்ப்பதில்லை.மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி வழியும்.அந்த காலத்தில் மலைக்கோயில் கட்டும் சமயம் குடிநீருக்காக பட்சிதீர்த்தத்தையும் இதர தேவைகளுக்காக இந்த குளத்தினையும் பயன்படுத்தியிருக்கலாம். சுப்பையா ஸ்வாமிகள் குகைக்கு பின்புறம் சென்று இந்த நரிக்குளத்தினை பார்வையிடலாம். ஆனால் ஆபத்து நிறைந்த பயணமாகும் அது..
நரிக்குளத்தின் ஏரியல் வியூ உங்கள் பார்வைக்கு...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக